Sunday 26 November 2017

சிதம்பர விலாஸ்!!!

கடந்த மாத இறுதியில் வந்த எங்களின் 43ஆவது திருமண நாளுக்கு, எங்காவது வெளி நாட்டிற்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ சுற்றுலா செல்லும்படி என் மகனின் வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவு தொலை தூரம் செல்ல விருப்பமில்லாததால் தமிழ் நாட்டிலேயே தேனி அல்லது ஏற்காடு சென்று வரலாமா என்று யோசித்தோம். தஞ்சையிலிருந்து என்று பார்த்தால் அதுவும் தொலை தூரமே. மேலும் தொடர்ந்து ஊரெல்லாம் பரவிக்கொண்டிருந்த டெங்கு ஜுரம், அடர் மழை எல்லாம் மிகவும் யோசிக்க வைத்தது.



யதேச்சையாக  காரைக்குடியில் தங்குவதற்கு சென்ற வருடம் ஹோட்டல்களையெல்லாம் அலசிக்கொண்டிருந்த போது கலை உணர்வும் அழகுமாய் தோற்றம் தந்த ' சிதம்பர விலாஸ்' என்ற மூன்று நட்சத்திர் ஹோட்டல் ஞாபகம் வந்தது. அங்கு சென்று தங்கி சுற்றியுள்ள சில இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.

பழைமையான, அழகான இந்த ஹோட்டலில் தங்கியிருந்தது இனிமையான அனுபவமாக இருந்தது. சின்னஞ்சிறு கிராமத்தில் நடுவில் அமைந்திருப்பதால் பெரிய கடைகள் எதுவும் அருகில் கிடையாது. 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ' கானாடு காத்தான்' என்ற சிறு நகரத்திற்குச் செல்ல வேண்டும்.



முகப்புத்தோற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடியாப்பட்டி எனும் மிகச்சிறிய கிராமத்தின், மிகப்பெரிய அடையாளம். ஆம், செட்டிநாட்டுக்கேயுரிய, அரண்மனையையொத்த வீடுகளில் ஒன்றுதான்... இந்த சிதம்பர விலாஸ்! ஒரு காலத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்த இந்த வீடு, இன்றைக்கு நீங்களும் வசிக்கும் ஒரு ஹோட்டலாக வடிவெடுத்து நிற்கிறது!

வேலைப்பாடுகள் நிறைந்த கதவு
1900 முதல் 1907 வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, ஒரு ஏக்கர் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது இந்த வீடு. அப்போதே ஏழு லட்ச ரூபாய் செலவானதாம் இதைக் கட்டி முடிக்க! வீட்டில் இருக்கும் கதவு, ஜன்னல், நாற்காலி உள்ளிட்ட அனைத்து மரவேலைப்பாடுகளுக்கும் பர்மாவிலிருந்து மரங்களை வரவழைத்துச் செய்துள்ளனர். கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்தும், டைல்ஸ்கள் இத்தாலியிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் ஓர் ஆணிகூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அறைக்கு வெளியே பழங்காலத்து இருக்கைகள்!!
நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்... கிருஷ்ணப்ப செட்டியார். அதன் பழமை மாறாமல், அதேசமயம் நவீனவசதிகள் பலவற்றையும் தன்னுள் சேர்த்துக்கொண்டிருக்கும் இந்த வீடு, தற்போது 'ஹோட்டல் சங்கம்’ குழுமம் நடத்தி வரும் ஹோட்டல்களில் ஒன்றாக, சுற்றுலா பயணிகளை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இப்படி ஹோட்டலாக வடிவெடுத்தாலும், ஒரு வீட்டுக்குரிய பாதுகாப்பு தரும் அம்சங்கள் அனைத்தும் மாறாமல்இருப்பது... ஆச்சர்யம். வீட்டில் ஒவ்வோர் இடத்துக்கும்... ஒவ்வோர் பெயர் வைத்துள்ளனர்.



முகப்பு:

ஹோட்டலின் உள்ளே நுழைந்த உடன் வரும் இடம். கல்லாப் பெட்டியுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்தக்கால செட்டியார்கள் கணக்கு பார்க்க பயன்படுத்திய டெஸ்க் வடிவ கல்லாப்பெட்டியை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

முற்றத்தை மூடியிருக்கும் கம்பிகளின் அழகு!
வளவு:

முகப்பை தாண்டி வந்தால் வருகிறது வளவு. நடுவில் முற்றம்... அதனை சுற்றி அறைகள் இருக்கின்றன.



அவற்றில் எல்லாம் பாரம்பரிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இன்று, விசிட்டர்களின் ரூமாக இருக்கும் இந்த வளவு, அந்தக் காலத்தில் திருமணமான ஆண்கள் ஒவ்வொரு வருக்கும் தனித்தனி அறை என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட இடம்.

பொம்ம கொட்டகை:



அந்தக் காலத்தில் விருந்தினர்கள் வந்தால் புழங்கும் இடமாகவும், மதிய உணவு உண்ணும் இடமாகவும், பூஜை வழிபாடு மற்றும் கொலு வைக்கும் இடமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்று, லன்ச் ஹாலில் ஒன்றாக இது மாறியிருக்கிறது. கலைப் படைப்புகளை ரசித்துக்கொண்டே உணவு உண்ணலாம்.

விசிறி ஹால்:



அந்தக் காலத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட விஸ்தாரமான ஹாலாக இருந்த இந்த இடத்தில், சுவர்களில் அழகான சாண்ட்லியர் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தன்மையோடு தற்போது வாழை இலை போட்டு பரிமாறப்படும் டைனிங் ஹாலாகவும் இது உருமாற்றப்பட்டிருக்கிறது.

மதிய உணவு எங்கள் இருவருக்கும் 1500 ஆனது. வேறு வித்தியாசமான சாப்பாடென்றால் ' கானாடு காத்தான்' அல்லது புதுக்கோட்டைக்குத்தான் செல்ல வேண்டும்.



டபுள் ரூம், ட்வின் ரூம், சூட் ரூம் என மூன்று ரகங்களில், இங்கு 25 ரூம்கள் உள்ளன. பாரம்பரிய உணவுகள், கூட்ட அரங்கு, நீச்சல்குளம், விளையாட்டு அரங்கு என அனைத்து வசதிகளும் இங்குண்டு. வெளிநாட்டினர் அதிகமாக இங்கே வருகின்றனர்.



அவர்களுக்கெல்லாம்... பாரம்பரிய உணவு வகைகளை சமைக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். கோலம் போடுவது, பூ கட்டுவது போன்றவற்றையும் கற்றுத்தருகிறார்கள். கூடவே... அருகில்இருக்கும் திருமயம் கோட்டை, சித்தன்னவாசல் குகைகள் என்றெல்லாம் அழைத்துச் சென்று காண்பிக்கிறார்கள்.
இந்த ஓட்டலில் அறைக் கட்டணங்கள் 7,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை .

Wednesday 15 November 2017

வாட்ஸ் அப் எச்சரிக்கைகள்!!!!!

சமீபத்தில் டெங்கு ஜுரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தஞ்சாவூர் இருந்தது. என் தங்கை வீட்டு மாடியில் குடியிருந்த 25 வயது இளம் பெண் படிப்பில் தங்க மெடல் கல்லூரியில் வாங்கியவர், முதுகலைப்பட்டங்கள் வாங்கியவர் ஜுரம் வந்த நாலே நாளில் இறந்து போனார். என் தங்கை அதிர்ச்சியில் உறக்கத்தைத் தொலைத்தார். தஞ்சையிலிருக்கும் பிரபல மருத்துவ‌ மனையில் நோயாளிகளுக்கான படுக்கை அறைகள் நிரம்பி வழிந்த நிலையில் வரவேற்பறையில் இருந்த நாற்காலிகளை அகற்றி  அங்கே நோயாளிகளைப் படுக்க வைக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைப்பாதுகாக்க ' வாட்ஸ் அப்'பில் வந்த குறிப்புகள் இதோ!!
டாக்டர் பரூக் அப்துல்லா என்பவர் இந்த அவசியமான எச்சரிக்கைக் குறிப்புக‌ளைக் கொடுத்திருக்கிறார்.




இது தான் டெங்கி காய்ச்சலோட போக்கு 

முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும். 

அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும். 

ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 

ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க.. 

காய்ச்சலோட போக்க பாருங்க. 

முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 

ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 

முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... 

நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 

அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... 

இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . 

ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.

ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 

ரூல் நம்பர் ஒண்ணு.

டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்

ரூல் நம்பர் டூ 

நீர் சத்துதான் டெங்கிவோட டார்கெட் , அதனால் முடிஞ்ச அளவு தண்ணீர் ,  இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.  

ரூல் நம்பர் 3 

இதுதான் முக்கியமான விசயம்.

காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூணு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 

இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கி போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்.

   *******************************************************************

அடுத்த எச்சரிக்கை வரவிருக்கும் சுனாமி பற்றி! 

இதைப்பற்றி ' ஜுனியர் விகடனில்கூட' இதே விபரங்களைத்தாங்கி கட்டுரை வந்திருக்கிறது.

இப்போது ' வாட்ஸ் அப்'பில் வந்த விபரங்கள்....

கடும் எச்சரிக்கைகக்கான பதிவு இது.. 




🔴" மீண்டும் சுனாமி - 2017, டிசம்பர் 31க்குள் ". சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை... ஆனால் இந்தமுறை முன்பை விட "பலமடங்கு" அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவல் 🔴

🔴இது 11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாம், குறிப்பாக ❗தமிழ்நாடும், கேரளாவும்தான்❗ 
ஏனென்றால் இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே நம் இந்தியப்பெருங்கடலில் இருந்து தானாம்...🔴

🔴இது தொலைவில் உள்ள வடகிழக்கில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும், வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வரை இதன் வீச்சு பாதிக்கும் என்றால்... இந்தியப்பெருங்கடல் அருகிலேயே உள்ள நம் "தமிழ்நாடு"  மற்றும் கேரளாவின் நிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்...🔴

🔴இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association - Director Mr.BabuKalayil, என்பவர்... இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர்... அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை... ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது... 

இவர்தான் தற்போது "வருமுன் காப்பதே சிறந்தது" என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன், அதை  Pரிமெ Ministerக்கும், தமிழ்நாடு Cஹிஎஃப் Ministerக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்... 

இதை படிக்கும் நீங்களும் இச்செய்தியை உறுதிசெய்து கொள்ள விரும்புவோராயின், தொடர்புக்கான எண் (திரு.பாபுகளைல் - 
  +91 9400037848)... மேலும் Google-ல் Babu Kalayil என்று Search செய்தால், இதற்கான அத்தனை ஆதாரங்களையும் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்... 🔴

🔴இது எங்கோ! எப்போதோ? அல்ல... இன்னும் 1மாதத்தில் கடலோர மக்கள் மட்டுமின்றி, நாம்  அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இயற்கை பேரழிவு என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்...🔴

🔴இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது... ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்...🔴

🔴இந்த இயற்கை சீற்றம் பற்றி தெரிந்து 41 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த ஒரு மீடியாவும் அழுத்தமாக பதிவு செய்யவில்லை... ஆனால் இந்த இயற்கை சீற்றம் நடந்த பின்னர் அத்தனை மீடியாக்களும், அதன் பாதிப்புகளையும், மக்களின் கண்ணீர்களையும், TV-ல் தொடர்ந்து காட்டிப்பணம் சம்பாதித்துக் கொள்வார்கள்🔴

🔴ஆகவே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள (முடியும்)வேண்டும்...🔴

🔴இது நம்முடைய
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால்... இதை யாரும் அலட்சியமாக பொருட்படுத்தாமல், தயவுசெய்து நம் மக்களை முடிந்தவரை பாதுகாப்பதற்காகவே பகிர்வோம்...🔴

🔴நம்முடைய இந்த பகிர்வு அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் முடிக்கிவிடப்பட்டு, அத்தனை மீடியாக்களால் வற்புறுத்தி சொல்லப்பட்டு, கடைகோடி மனிதர்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது நம் கடலோர மக்களைக் காக்கவேண்டி தகுந்த முன்னேற்ப்பாடுகள் செய்யப்படுத்தப்பட வேண்டும்...🔴

🔴தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று அரசியலுக்காக பேசும் அத்தனை "வாய்களும்" இக்கணம் முதல் விழிப்புணர்வுக்காக பேசி,  விலைமதிப்பில்லாத மனித உயிர்களுக்கு தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து தர வழி வகுக்கட்டும்...🔴

🔴ஒரு ஜல்லிக்கட்டில் இணைந்த நம்முடைய What's Up பலத்தால், நாம் நம் காளை மாடுகளின் உயிர்களைக் காப்பாற்றினோம்... அதை விடத் துரிதமாய் செயல்பட்டு அத்தனை சமூக வலைதளங்களிலும் பரப்பி, நம்முடைய கடலோர மக்களின் உயிர்களையும் காப்பாற்றுவோம்...🔴

பொதுநலன் கருதும் தமிழக இளைஞர்களில் ஒருவன்... நன்றி...




Tuesday 7 November 2017

மரவள்ளிக்கிழங்கு அடை!!

இந்த முறை நல்லதொரு சமையல்குறிப்பை பதிவிடலாம் என்ற யோசனை வந்தபோது வீட்டில் தயாராகிக்கொண்டிருக்கும் மரவள்ளிக்கிழங்கு அடையின் நினைவு வந்தது. மரவள்ளிக்கிழங்கில் வடை, பொரியல் எல்லாம் செய்வதுண்டு என்றாலும் இந்த அடை தான் எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் மாமியார்  தண்ணீரை  கொதிக்க வைத்து மரவள்ளிக்கிழங்குத்துண்டங்களைப்போட்டு வேக வைப்பார்கள். அதில் உப்பு, நசுக்கிய‌ பூண்டு பற்கள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைப்பார்கள். அத்தனை சுவையாக இருக்கும் அப்படி வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு!! காலை நேரத்தில் இது தான் சில சமயம் உணவாக இருக்கும். ஆனால் சர்க்கரை நோய்க்காரர்கள் இந்த சுவையிலிருந்து கொஞ்சம் தள்ளித்தான் நிற்க வேண்டும். காரணம் 88 சதவிகிதம் இதில் மாவுச்சத்து இருப்பது தான்!!



பிரேசிலில் பிறந்த மரவள்ளிக் கிழங்கு மெதுவாக பல நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா, இலங்கை என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. இதிலிருந்து தான் ஜவ்வரசி போன்ற உணவுப்பொருள்கள் தயாராகின்றன. பாஸ்பரஸ், கால்சியம் நார்ச்சத்து என சத்துக்கள் அடங்கிய மரவள்ளிக்கிழங்கு இரத்த ஓட்டத்தையும் சிகப்பு இரத்த அணுக்களையும் அதிகரிப்பதால் இதை குழந்தைகளுக்கு கஞ்சி மாவாக தயாரித்துக்கொடுப்பது வழக்கம். கேரளாவில் பச்சிளங்குழந்தைகளுக்கு கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். வேக வைத்து வெல்லப்பாகு கலந்து கொடுப்பார்கள். என் அனுபவத்தைப்பொருத்தவரை கேரளாவிலும் இலங்கையிலும் விளையும் கிழங்கிற்கு சுவை மிக அதிகம்!!

இப்போது மரவள்ளிக்கிழங்கு அடையைப்பார்க்கலாம்.



மரவள்ளிக்கிழங்கு அடை:

தேவையான பொருள்கள்:

மரவள்ளிக்கிழங்குத் துருவல்- 4 கப்
பச்சரிசி                    -  2 கப்
துவரம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய்- 8
சின்ன வெங்காய்ம் அல்லது பெரிய வெங்காயம் மெல்லியதாய் அரிந்தது- 1 கப்
பெருங்காயம்- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை -2 ஆர்க்
தேவையான உப்பு
சோம்பு-1 ஸ்பூன்

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளை போதுமான நீரில் வற்றல் மிளகாயுடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அரிசியை மிளகாய், பெருங்காயம், சோம்பு, போதுமான நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மெல்லிய அடைகளாய் வார்த்தெடுக்கவும்.

தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான பக்கத்துணையாக இருக்கும்.