Monday 23 September 2013

மூன்றாவது உலகப்போர்!!!

இந்தியாவில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வெகு விரைவில் வரலாம் என்று அமெரிக்காவின் நாசா  உள்பட கருத்துக்கணிப்புகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் பசுமைப்புரட்சிக்கு பல உள்ளங்கள் வித்திட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் வயல்களைத்தூர்த்தும் மரங்களை வெட்டியும் கட்டடங்கள் எழும்புவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல மாதங்கள் முன்பு, ஒரு மாத இதழில் உலகமுழுதுமுள்ள தண்ணீர்ப்பற்றாக்குறைகள் பற்றி விரிவாக சுட்டிக்காட்டி எழுதியிருந்த தகவல்களைப் பபடித்தபோது பகீரென்று இருந்தது. அந்தத் தகவல்களை கீழே சுருக்கி எழுதியிருக்கிறேன்.. .. ..

மூன்றாவது உலக யுத்தம் உண்டாகுமானால் அது பெரிய அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது நாட்டை விஸ்தரிக்கும் ஆசையிலோ ஏற்படப்போவதில்லை. தண்ணீருக்காக மட்டுமே அந்த யுத்தம் ஏற்படும் என்று ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலர் புர்டோஸ் கூறியுள்ளார்.
இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் தண்ணீர் அளவு மூன்று சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியான விஷயம். மொத்த நீரின் அளவில் 97 சதவிகிதம் உப்பு நீராக உள்ளது.

இந்த சதவிகித நல்ல நீரைக்கொண்டு தான் இந்த உலகின் அனைத்து நாடுகளிலும் பயிர் உற்பத்தி, மனித வாழ்வு என அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகின் மூன்று சதவிகித மொத்தத் தண்ணீரின் பயன்பாட்டில் 92 சதவிகிதம் விவசாயப்பயன்பாட்டிற்கும் ஐந்து சதவிகிதம் குடிநீர் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கும் மூன்று சதவிகிதம் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

நமக்குக் கிடைக்கும் மூன்று சதவிகித நல்ல நீரையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி தண்ணீர் சேமிப்பு வழி முறைகள் ஏதுமின்றி மிக தாராளமாக செலவழிப்பதால் ஆண்டுக்கு ஆண்டு தண்ணீரின் அளவு குறைகிறது. இருக்கக்கூடிய மிகக்குறைந்த நீரிலும் அதிக அளவு தொழிற்சாலைகளின் கழிவுகள், மாசுக்கள் கலப்பதால் அவையும் ஆபத்தான நீராய் மாறி வருகின்றன.

இயற்கையின் கொடை நீர் பனிமலைகள் உருகுவதாலும் ஆறுகள், ஏரிகள் மூலமாகவும் நிலத்தடி நீராகவும் நமக்கு கிடைக்கிறது. இப்படி அரிதான வளங்களிலிருந்து உருவாகும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்ற அபாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இயற்கையின் கொடையான காடுகள் அழிக்கப்படுவதால் உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.



நிலத்தடி நீரோட்டங்களின் திசை மறுவதாலும் உலகில் அதிகரித்து வரும் வெப்ப நிலை உயர்வால் பனிமலைகள் வெகு விரைவாக உருகி வருவதாலும் விரைவில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வருங்காலத்தில் பண பலமோ படை பலமோ ஆயுத பலமோ ஒரு நாட்டின் வெற்றியை தீர்மானிக்கப்போவதில்லை. ஒரு நாட்டில் நிறைந்துள்ள தண்ணீர் வளமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்ககூடிய சக்தி வாய்ந்ததாக உள்ளது. இப்போதே தண்ணீருக்கான யுத்தம் தொடங்கி விட்டது எனலாம்.
வல்லரசு நாடுகளைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வரும் நாடுகள் அல்லது கீழை நாடுகளில் வர்த்தக நிறுவனங்களாக நுழைந்து உலக வர்த்தக நிறுவனங்களின் உதவியுடன் அந்த நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்றி குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவது இதற்கு சான்று.

பன்னாட்டு நிறுவனங்கள் நீர் ஆதாரங்களுக்கு அருகில் தங்கள் நிறுவனங்களை அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் இயற்கையின் கொடையை முற்றிலும் உறிஞ்சி வருவதால் பல நீரோடைகள் வரண்டு வருகின்றன. நாளடைவில் அனைத்து தேவைகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
2015ம் ஆண்டில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வட ஆப்பிரிக்காவிலும் கடும் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மேற்கூரை என்று வர்ணிக்கப்படும் இமயமலையின் உச்சியில் பனிமுகடுகளிலிருந்து உருவாகி வரும் ஆசியாவின் மிக நீளமான நதி என்று பெயர் பெற்றிருக்கும் பிரம்மபுத்ரா நதியை சீனா தன் அதிகார பலத்தால் தனது பகுதிகளுக்கு திசை திருப்பி விடுகிறது. இதனால் இந்தியா, திபேத் நாடுகளின் பல பகுதிகளில் நீரோட்டம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா-சீனாவிற்கிடையே நதி மோதல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இது போல சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்படும் மஞ்சள் நதியை திசை திருப்பியதிலும் சீனா-தாய்லாந்து நாடுகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் ஜோர்டானின் நதி நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதில் இஸ்ரேல்-சிரியா நாடுகளிடையே கடும் மோதல் தொடங்கியுள்ளது. எகிப்தின் முக்கிய நீர் ஆதாரமான நைல் நதியின் குறுக்கே யாரேனும் அனை கட்டினால் ராணுவ பலம் கொண்டு அவர்களை அழிப்போம் என்று எகிப்து பகிரங்கமாக எச்சரித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ்-மியான்மர் நாடுகளிடையேயும், தாய்லாந்து-கம்போடியாவிற்கிடையேயும் நீர் ஆதாரங்கள் பிரச்சினையால் மோதல் இருந்து வருகிறது.

வளர்ந்த நாடுகள் நீர் ஆதாரங்களை முறைப்படுத்தியுள்ளதாலும் சேமிப்பு போன்ற வழிகளைப்பயன்படுத்தி வருவதாலும் அவை குடிநீர்ப்பஞ்சத்திலிருந்து ஓரளவு தப்பிக்கும் நிலை இருக்கிறது. ஆனால் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடாக இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவின் நீர் வளக்கொள்கை ஏட்டளவிலேயே உள்ளது. வட இந்தியாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில் தென் இந்தியாவில் வரட்சி தலை விரித்தாடும் அவல நிலையை இங்கு மட்டுமே காண முடியும். இந்தியாவின் தேசீய சொத்தாக நதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நீர் வளம் மிகுந்த மாநிலங்கள் அவற்றை தங்கள் சொத்தாகவே பாவித்து வருகின்றன. நதி நீர் இணைப்பு மிகச்சிறந்த வழியென்றாலும் அதில் யாரும் துரும்பை எடுத்துக்கூட கிள்ளிப்போடவில்லை. முன்னேறிய நாடுகள் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப்பஞ்சத்தை தீர்க்க தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலோ நதி நீர் பிரச்சினைகள் வாக்கு வங்கி அரசியலோடு பிணைக்கப்பட்டு இருப்பதால் உள்நாட்டிலேயே மோதல்கள் தான் ஏற்படுகின்றன.

2025ம் ஆண்டு ஆசிய, மத்தியக்கிழக்கு, ஆப்பிரிக்க நடுகளில் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று உலக நதி நீர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இப்போதாவது விழித்து எழுந்து நீர் ஆதாரங்களை முறைப்படுத்தவும் காக்கவும் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மூன்றாம் உலக யுத்தத்தின் அழிவிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

நாமும் நம் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பதை தீவிரமாக்குவதோடு, மரங்களை நடுவதையும் ஊக்குவிப்போம்!!

படங்களுக்கு ந‌ன்றி: கூகிள்

24 comments:

கவியாழி said...

ஆம் உண்மைதான் இப்போதே விழிப்புடன் செயல்பட வேண்டும்.தண்ணீரை சேமிக்க வேண்டும்

கரந்தை ஜெயக்குமார் said...

தண்ணீருக்காக மூன்றாம் உலக யுத்தம். நடந்தாலும் நடக்கலாம். நன்றி சகோதரியாரே

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாமும் நம் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பதை தீவிரமாக்குவதோடு, மரங்களை நடுவதையும் ஊக்குவிப்போம்!!//

விழிப்புணர்வு ஏற்படுத்தும் மிகவும் பயனுள்ள கட்டுரை. பாராட்டுக்கள் + நன்றிகள்.

Priya said...

நல்ல பதிவு... உண்மைதான்... பன்னாட்டு நிருவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்க்கும் தண்ணீர்தான் சுகதாரமான தண்ணீர் என்று பரப்பபட்டுள்ள ஒரு கருத்துமே அவைகளின் வளர்ச்சிக்கும் காரணம்... நல்ல குடி தண்ணீர் இப்பொழுதே பல ஏழை மக்களுக்கு எட்டா கனியாகி விட்டது இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் அனைவருக்குமே நல்ல தண்ணீர் நல்ல கனவாய் ஆகி விடும்...

வெங்கட் நாகராஜ் said...

தண்ணீரை பல வழிகளிலும் வீணாக்கும் பலர் திருந்தினால் தான் உண்டு.....

ஆனால் திருந்துவார்களா/வோமா?

aavee said...

ஆமாங்க.. இதையே தான் நான் என் மெத்தப் படித்த ஒரு நண்பனிடம் கூறிக் கொண்டிருந்தான்.. அதற்கு அவன்.. "டோன்ட் ஒர்ரி டா, கேன் வாட்டர் வாங்கிக்கலாம்" என்கிறான். என்ன சொல்வது??

இராஜராஜேஸ்வரி said...

இப்போதாவது விழித்து எழுந்து நீர் ஆதாரங்களை முறைப்படுத்தவும் காக்கவும் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மூன்றாம் உலக யுத்தத்தின் அழிவிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.


பயனுள்ள எச்சரிக்கை பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போதிருந்தே கவனத்துடன் இருந்தால் சிறிதளவு தப்பிக்கலாம்... நல்லதொரு ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல பகிர்வு.....

குடி நீருக்காகத்தான் அடுத்த யுத்தம் என்பது நிதர்சனமான உண்மை....!

Yaathoramani.blogspot.com said...

அருமையான விரிவான
எச்சரிக்கைப் பதிவிற்கு
மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் கவியாழி கண்ணதாசன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ச்கோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான அருமையான கருத்துரைக்கு இனிய நன்றி ப்ரியா!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! நாமும் தண்ணீரை அளவுடன் உபயோகிக்க கற்றுக்கொள்ள‌ வேண்டும். கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ! தண்ணீரைப்பற்றிய விழிப்புணர்வு நிறைய பேருக்கு இருப்பதில்லை. கருத்துரைக்கு அன்பு நன்றி ஆனந்த ராஜா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் மனோ!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இதய்ம் கனிந்த நன்றி சகோதரர் ரமணி!

vimalanperali said...

வகுக்கப்படுகிற திட்டங்கள் நம்மால் நம் சார்ந்து யோசிக்கப்படும் போது,நம் சுய சார்ப்பு பற்றியும் சிந்திக்கப்படுகிற வேளையிலுமாய் சரியாய் இருக்கும் எதுவும்,போர்க்கால நடவடிக்கைகள் தண்ணீர் பிரச்சனையில் மட்டுமல்ல,இன்னும் பலவற்றில் வேண்டியதிருக்கிறது மேடம்,நம் சுயம் சார்ந்துநன்றி வணக்கம்.

கோமதி அரசு said...

இப்போதாவது விழித்து எழுந்து நீர் ஆதாரங்களை முறைப்படுத்தவும் காக்கவும் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மூன்றாம் உலக யுத்தத்தின் அழிவிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.//

நாமும் நம் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பதை தீவிரமாக்குவதோடு, மரங்களை நடுவதையும் ஊக்குவிப்போம்!!//

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.
மக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் பங்கை சரிவர செய்து மழைநீரை சேகரித்து , நீரை சிக்கனமாக செலவு செய்தால் நாளை ஏற்படும் அழிவிலிருந்து கண்டிப்பாய் தப்பிக்கலாம்.
நீர் வளம் உயர்ந்து உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க பிராத்திப்போம்.

தி.தமிழ் இளங்கோ said...

கட்டுரையில் பல கருத்துக்களை தொகுத்து வழங்கினீர்கள். எனக்கென்னவோ தண்ணீருக்காக இப்படி ஒரு உலகப்போர் வராது என்றே நினைக்கிறேன்.

நிலாமகள் said...

வரும் சந்ததியினர்க்கு சேமிக்க வேண்டிய மிக முக்கிய சொத்து!